Thursday, July 2, 2009

காதல் உன் லீலையா !!!!!

பாடியவர் : இசைஞானி
படம் : ஜப்பானில் கல்யாண ராமன்

திரு.பஞ்சு அருணாசலம் அவர்கள் தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் அவர்கள் இயக்கத்தில் கமல்ஹாசர் நடித்த ஜப்பானில் கல்யாணராமன் திரைப்படத்திற்காக ஒலிதகட்டில் மட்டுமே வந்து திரைப்படத்தில் காட்சியாக்கபடாததால் அநேகபேரை சென்றடையாமல் போன இசைஞானியின் மற்றுமொரு அருமையான பாடல் தான் "காதல் உன் லீலையா இளம் காமன் உன் வேலையா ".

கேட்போரின் மனதை மயக்கும் இந்த பாடலை எனக்கு அறிமுகபடுதியவர் அன்புக்குரிய சகோதரர் அலெக்ஸ் அவர்கள் இந்த பாடலை நான் முதல்முறை கேட்டவுடனே இந்த பாடல் என் மனதில் பதிந்து விட்டது! அதற்கு காரணம் எனக்கும் காதலித்த அல்லது காதலிக்கும் (நான் இசைஞானியின் இசையை பற்றி சொல்கிறேன், வேறேதும் நினைத்து கொள்ளவேண்டாம்) அனுபவம் இருப்பதாலோ என்னவோ!!!

இந்த பாடலின் சிறப்பம்சங்களில் ஓன்று எளிமையான இசைக்கோர்வை !!
தேவையற்ற ஒலிகள் எழுப்பாமல் (சமீபத்திய ஒலியமைப்பாளர்கள் போல் மன்னிக்கவும் இசை அமைப்பாளர்களை போல்) பாடலுக்கு என்ன தேவையோ அந்தந்த வாத்தியங்களின் ஓலியை சரியான அளவில் எப்பொழுதும் போல உபயோகித்திருப்பார் இந்த பாடலில் இசைஞானி.


இந்த பாடலை நான் திரும்ப திரும்ப கேட்கும் போது மூன்று வெவ்வேறு காட்சி அமைப்புகள் என் மனதிலே தோன்றியது (ஏனென்றால் இந்த பாடல் திரைப்படத்தில் காட்சியாக்க படவில்லை என்பதால் )

காட்சி 1:
இந்த பாடலில் காதலனும் காதலியும் பிரிந்த பிறகு பாடல் வரிகளை அவர்களின் உதடுகள் உச்சரிக்காமல் கடந்த கால காதல் நினைவுகளை நினைத்துப்பார்த்து உருகுவது போலவோ ..

காட்சி 2:
காதலே வேண்டாமென்று இருக்கும் இருவருக்குள் காதல் புதிதாக குடிபுகுந்திருக்கும் அந்த ஒருவித சொல்லமுடியாத மகிழ்ச்சி கலந்த தவிப்பை விளக்கும் பாடலாகவோ...

காட்சி 3:
இளமை எனும் பூங்காற்று ,என்னுள்ளே என்னுள்ளே பாடல்கள் காட்சியமைப்பை போல காட்சிப்படுதினால் நன்றாக இருக்கும் என தோன்றியது எனக்கு..

இப்பொழுது புரிகிறதா இசைஞானியின் இசையின் லீலை..வலைபக்கத்தில் அவருடைய பாடல்களை பற்றி எழுதும் நோக்கத்தோடு வந்த என்னை அவருடைய பாடலுக்கு ஒரு இயக்குனராக காட்சியமைக்கும் ஆசையை தூண்டிவிடுகிறது !!இதுதான் .இசைஞானியின் இசையின் மகத்துவம்..


" இந்த பாடல் உம் லீலையா !! "
" இசைஞானி உம் வேலையா !! "


ராஜா சரணம் !!
என்றும் அன்புடன் இசைஞானியின் தாசன் ,
எஸ்.தேவிந்த்

என்னை மயக்கிய பாடல் இதோ உங்களுக்காக!!
===================

Get this widget | Track details | eSnips Social DNA


==============

என்னுடைய இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த பொத்தானை அழுத்தி உங்களது வாக்கினை பதிவு செய்யுங்கள் ...

நன்றி

7 comments:

  1. ithu ungaluku matum ila devinth ketkaravanga elarukumae oru vitha irpai yaerpadutha kudiya paadal....
    ithu enakum oru pudhu vithama irundathu muthal taadvai kekara apo.... athula irundu enoda thaalatu paadal ah maririchu...
    devinth avargaluku mikha nandri intha paadalai patri ezhutiyathuku...

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. இசை ஞானியின் தேன் தடவிய குரல்
    நெஞ்சை வருடுவதாக உள்ளது.

    Thanks for Sharing this Fabulous Soul Stirring Melody Friend.
    Cheers.

    ReplyDelete
  4. romba naal aachu indha pattai kettu....very simple song but the song becomes very close to you after two three hearings..raaja voda ethartha kural indha paatukku melum azhagu serkudhu...

    ReplyDelete
  5. Hey, You have written absoultely fantastic!

    ReplyDelete
  6. Nandri janaks,venkat,kavitha and priya

    ReplyDelete