நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களுக்கெல்லாம் பல விருதுகள் கொடுக்கும் போது இசைஞானி என்ற மேதை மட்டும் ஒதுக்க படுவதன் காரணம் என்ன?? விருதுகள் என்ற பெயரில் வியாபாரம் செய்யும் இந்த உலகில் இசைஞானிக்கு விருதுகள் அவசியம இல்லை என்ற விவாதம் நீண்ட நாட்களாகவே உண்மையான இசை ரசிகர்களிடையில் நடைபெற்று கொண்டிருக்கிறது .
ஆனால் இதில் விருதுகள் தேவை இல்லை என்பது முழுமனதாக சொல்லப்படும் கருத்து இல்லை என்பதே நிஜம்.
விருதுகள் என்பது மட்டுமே ஒரு உண்மையான கலைஞனுக்கு அடையாளம் என்பதாக அர்த்தம் இல்லை,.இருந்த போதிலும் எந்த ஒரு கலைஞனுக்கும் விருதுகள் என்பது அவருடைய பணிக்கு கிடைக்கும் சிறந்த மரியாதை.அதை இசைஞானி போன்ற மேதைகளுக்கு அளிப்பதால் அந்த விருதுகள் இன்னும் சிறப்பை பெரும் என்பதில் எந்த வித மாற்றுகருத்தும் இருக்க முடியாது !!.அப்படி இருக்கையில் இசைஞானிக்கு விருதுகள் கொடுக்காமல் இருப்பதின் பின்னணி இன்றளவும் புரியாத புதிராக உள்ளது ...இதற்கெல்லாம் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு விடை .... ஒரு துளி கண்ணீர் தான் விடமுடியும் இப்படி நடப்பதை நினைத்து..
இது மட்டுமல்லாத சமீபத்தில் அனைத்து ஊடகங்களிலும் உபயோகிக்கும் ஒரு வார்த்தை " உலக இசை" மிக விரைவில் .
எது உலக இசை ??
ஹங்கேரி நாட்டில் சென்று இசைஞானி "symphony " இசை தொகுத்து நமக்கு வழங்கிய போது அதை உலக இசை என்று கொண்டாடாத இந்த ஊடகங்கள்.சமீபத்தில் வெளியான ஒரு படத்தின் பாடல்கள் வெளியீட்டு முன்னாதாக "உலக இசை இன்னும் சில தினங்களில் " அப்படி என்று விளம்பரம் செய்கிறார்கள் ,சரி அந்த உலக இசையை கேட்டுதான் பார்ப்போமே என்று கேட்டால் ,அதன் தரம் பக்கத்து வீட்டுக்கு கூட எட்டாமல் போகும் இசை .அப்படி பட்ட மோசமான பாடல்களுக்கே அவ்வளவு விளம்பரம் கொடுக்கும் போது நம்ம தலைவரின் இசை எந்த விதத்தில் தரம் குறைந்தது என்று தெரியவில்லை ..
எது உலக இசை லண்டனில் போய் குறுந்தகடு வெளியிட்டால் அதற்கு பெயர் உலக இசையா ??அவர்கள் அறியாமையை என்னவென்று சொல்வது ...
"படம் வணிக ரீதியாக வெற்றி பெற வேண்டுமென்றால் இசைஞானியின் இசை வேண்டாம் "
இது சமீபத்தில் பரவலாக பேசப்படும் கருத்து .
கமல்ஹாசரும் இசைஞானியும் இணைவார்களா என்ற கேள்விக்கு இப்பொழுதுள்ள பதில் .....நல்ல இசை வேண்டுமென்றால் இசைஞானி போதும்..ஆனால் வணிக ரீதியாக படம் வெற்றி பெற வேண்டுமென்றால் வேறு இரண்டு இசை அமைபாளர்களுடன் கமல்ஹாசர் கை கோர்க்க வேண்டும் என்கிறாகள்....அப்படி பார்த்தால் இப்போழுதுள்ளவர்களுக்கு உயிரை உருக்கும் இசை வேண்டாம்...செவிகளை பதம் பார்க்கும் இசைதான் வேண்டுமா ??? அதற்கு பெயர்தான் வணிக இசையா?????
இசைஞானி எத்தனை மோசமான படங்களுக்கு தன் இசை மூலம் வணிக வெற்றியை தேடி தந்திருப்பார் என்று பட்டியலிட்டால் இப்படி சொல்லுபவர்கள் முகத்தை எங்கு வைத்து கொள்வார்களோ ??
ஒரு உண்மையான மேதைக்கு இந்த வியாபார உலகில் சரியான இடம் தரப்படவில்லை என்னும்போது ரத்த கண்ணீர் வடிகிறது ...
அவர்களுக்கெல்லாம் நான் சொல்லி கொள்கின்ற ஓன்று "இசைஞானியை அறியார் இசையை அறியார் "
உலக இசை ரசிகர்களுக்கு ,
என் இசைஞானியின் இந்த பாடலுக்கு இணையாக உங்கள் உலக இசை அமைப்பாளர்கள் ஒரு சிறிய இசை துகளை அமைத்து விட்டால் அதன் பிறகு நான் பாடல் கேட்பதையே நிறுத்தி விடுகிறேன் .
இசையில் தொடங்குதம்மா - ஹே ராம்
http://www.thiraipaadal.com/albums/ALBIRR00178.html
நன்றி,
இசைஞானியின் தாசன் ,
எஸ்.தேவிந்த்
Saturday, January 23, 2010
Monday, July 6, 2009
மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட !!
பாடியவர்கள்: இசைஞானி மற்றும் ஜானகி அம்மா
இந்த அழகான,கேட்போரின மனதை மயக்கும் இந்த பாடலை நான் இப்பொழுது இந்த பக்கத்தில் எழுதுவதற்கு காரணம் ஒரு பெண் தான்!!!அவளை நான் பார்த்த தருணத்திலே இந்த பாடல் தான் என் மனதிலே பின்னணி இசையாக ஒலித்தது (ஒரு வேளை திருமணமாகி இருக்குமோ!! ஏனென்றால் மெட்டி ஒலி அல்லவா என் நெஞ்சை தாலாட்டுகிறது!!)சரி அது ஒரு புறம் இருக்கட்டும் !!!!
இசைஞானியின் இசை மாலைகளுள் இந்த மாலைக்கு எப்போதும ஒரு தனி இடம் உண்டு என்றால் அதை யாரும் மறுப்பதற்கு இல்லை..அதற்கு காரணம் இந்த பாடலின் இசை அமைப்பு மற்றும் இசைஞானியும் ஜானகி அம்மாவும் பாடிய விதம் (என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை!)மன்னிக்கவும் நான் சொல்ல வந்தது என்னவென்று சொல்வதம்மா இந்த பாடலினால் நான் பெற்ற இன்பத்தை!!
பாடலின் துவக்கத்தில் ஜானகி அம்மா பாட அதனோடு சேர்ந்து இசைஞானி பாடும் விதமும் (பூமாலையே தோள் சேரவா !!பாடலை போல )அலை ஓசையுடன் கூடிய மற்ற இசை வாத்தியங்களின் இசையும் மனதை வருடும் விதமாக அமைத்திருப்பது இந்த பாடலின் தனிச்சிறப்பு !!!
அதிலும் பல்லவியை அடுத்து வரும் தனி வயலின் இசை இசைஞானியால் மட்டுமே நிகழ்த்த முடிகின்ற அற்புதம் (இசை கடவுள் என்று இதற்குத்தான் சொல்லுகின்றோம்!!) மேலும் இந்த பாடலில் கிடார் மற்றும் புல்லாங்குழல் முக்கியமான பங்கு வகித்திருக்கும்...
மொத்தத்தில் இந்த பாடல் கேடகும் ஒவ்வொருவரின் மனதையும் வருடும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இருக்க முடியாது..
ஆனால் இந்த பாடலை திரையுலக ஜாம்பவான் மகேந்திரன் படமாக்கியிருக்கும் விதம் நன்றாக இருந்தாலும் பாடலும் இந்த பாடல வரிகளும் இந்த காட்சி அமைப்புக்கும் பொருத்தமானதாக இல்லையோ என்ற ஒரு வித ஐயம் ஏற்படும் ...அதற்கு காரணம் ஒரு ஆணும் பெண்ணும் பாடும் பாடலை மூன்று பெண்களை வைத்து படமாக்கி இருப்பார் அவர்.அதிலும் இரண்டாவது சரணத்தில் பெண்முல்லையே என்று இசைஞானி பாடும்போது பின்னணியில் கேட்கும் ஜானகி அம்மாவின் விரகதாப (ஹா..........) குரல் இந்த பாடலின் காட்சி அமைப்பு இப்படி இருக்க கூடாது என்பதை அழுத்தமாக நமக்கு உணர்த்தும் விதமாக அமைந்திருக்கும்.
என்னை பொறுத்தவரை இந்த பாடலை அந்திமழை பொழிகிறது பாடலுக்கு காட்சி அமைத்ததை போல அமைத்திருக்க வேண்டும் அல்லது காதலர்கள் அவர்களுடைய எண்ணங்களை பரிமாறிக்கொண்டு நடந்து போவது போல் காட்சி அமைத்திருந்தால் பொருத்தமாகவும் நன்றாகவும் இருந்திருக்கும் என்பது என் எண்ணம் (கருத்துக்களும் எண்ணங்களும் ஒவ்வொருவருக்கும் வேறு மாதிரியாக இருக்கும் ஆகவே நான் மகேந்திரன் அவர்களின் காட்சியமைப்பை தவறாக சொல்வதாக எண்ணி கொள்ள வேண்டாம் அதற்கு எனக்கு தகுதி இல்லை என்பதை நானறிவேன்!!)
இசைஞானியே!!!
கடவுள் என் முன்னே தோன்றி என்ன வரம் வேண்டும் என்று
கேட்டால் நான் கேட்கும் வரம் என்னவென்றால்!!
வாழ் நாளெல்லாம் உம இசையோடு வாழ்ந்தாலே போதும்!!!
நான் இம்மையை விட்டு மறுமைக்கு சென்றாலும்,
இது போன்ற உம பாடல்கள் என் காதில் ஒலித்து கொண்டே
இருக்க வேண்டும் என்று கேட்பேன்!!
ராஜா சரணம்!!
இசைஞானியின் தாசன் எஸ்.தேவிந்த்
என்னை மயக்கிய இந்த பாடல் இதோ உங்களுக்காக !!
இந்த அழகான,கேட்போரின மனதை மயக்கும் இந்த பாடலை நான் இப்பொழுது இந்த பக்கத்தில் எழுதுவதற்கு காரணம் ஒரு பெண் தான்!!!அவளை நான் பார்த்த தருணத்திலே இந்த பாடல் தான் என் மனதிலே பின்னணி இசையாக ஒலித்தது (ஒரு வேளை திருமணமாகி இருக்குமோ!! ஏனென்றால் மெட்டி ஒலி அல்லவா என் நெஞ்சை தாலாட்டுகிறது!!)சரி அது ஒரு புறம் இருக்கட்டும் !!!!
இசைஞானியின் இசை மாலைகளுள் இந்த மாலைக்கு எப்போதும ஒரு தனி இடம் உண்டு என்றால் அதை யாரும் மறுப்பதற்கு இல்லை..அதற்கு காரணம் இந்த பாடலின் இசை அமைப்பு மற்றும் இசைஞானியும் ஜானகி அம்மாவும் பாடிய விதம் (என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை!)மன்னிக்கவும் நான் சொல்ல வந்தது என்னவென்று சொல்வதம்மா இந்த பாடலினால் நான் பெற்ற இன்பத்தை!!
பாடலின் துவக்கத்தில் ஜானகி அம்மா பாட அதனோடு சேர்ந்து இசைஞானி பாடும் விதமும் (பூமாலையே தோள் சேரவா !!பாடலை போல )அலை ஓசையுடன் கூடிய மற்ற இசை வாத்தியங்களின் இசையும் மனதை வருடும் விதமாக அமைத்திருப்பது இந்த பாடலின் தனிச்சிறப்பு !!!
அதிலும் பல்லவியை அடுத்து வரும் தனி வயலின் இசை இசைஞானியால் மட்டுமே நிகழ்த்த முடிகின்ற அற்புதம் (இசை கடவுள் என்று இதற்குத்தான் சொல்லுகின்றோம்!!) மேலும் இந்த பாடலில் கிடார் மற்றும் புல்லாங்குழல் முக்கியமான பங்கு வகித்திருக்கும்...
மொத்தத்தில் இந்த பாடல் கேடகும் ஒவ்வொருவரின் மனதையும் வருடும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இருக்க முடியாது..
ஆனால் இந்த பாடலை திரையுலக ஜாம்பவான் மகேந்திரன் படமாக்கியிருக்கும் விதம் நன்றாக இருந்தாலும் பாடலும் இந்த பாடல வரிகளும் இந்த காட்சி அமைப்புக்கும் பொருத்தமானதாக இல்லையோ என்ற ஒரு வித ஐயம் ஏற்படும் ...அதற்கு காரணம் ஒரு ஆணும் பெண்ணும் பாடும் பாடலை மூன்று பெண்களை வைத்து படமாக்கி இருப்பார் அவர்.அதிலும் இரண்டாவது சரணத்தில் பெண்முல்லையே என்று இசைஞானி பாடும்போது பின்னணியில் கேட்கும் ஜானகி அம்மாவின் விரகதாப (ஹா..........) குரல் இந்த பாடலின் காட்சி அமைப்பு இப்படி இருக்க கூடாது என்பதை அழுத்தமாக நமக்கு உணர்த்தும் விதமாக அமைந்திருக்கும்.
என்னை பொறுத்தவரை இந்த பாடலை அந்திமழை பொழிகிறது பாடலுக்கு காட்சி அமைத்ததை போல அமைத்திருக்க வேண்டும் அல்லது காதலர்கள் அவர்களுடைய எண்ணங்களை பரிமாறிக்கொண்டு நடந்து போவது போல் காட்சி அமைத்திருந்தால் பொருத்தமாகவும் நன்றாகவும் இருந்திருக்கும் என்பது என் எண்ணம் (கருத்துக்களும் எண்ணங்களும் ஒவ்வொருவருக்கும் வேறு மாதிரியாக இருக்கும் ஆகவே நான் மகேந்திரன் அவர்களின் காட்சியமைப்பை தவறாக சொல்வதாக எண்ணி கொள்ள வேண்டாம் அதற்கு எனக்கு தகுதி இல்லை என்பதை நானறிவேன்!!)
இசைஞானியே!!!
கடவுள் என் முன்னே தோன்றி என்ன வரம் வேண்டும் என்று
கேட்டால் நான் கேட்கும் வரம் என்னவென்றால்!!
வாழ் நாளெல்லாம் உம இசையோடு வாழ்ந்தாலே போதும்!!!
நான் இம்மையை விட்டு மறுமைக்கு சென்றாலும்,
இது போன்ற உம பாடல்கள் என் காதில் ஒலித்து கொண்டே
இருக்க வேண்டும் என்று கேட்பேன்!!
ராஜா சரணம்!!
இசைஞானியின் தாசன் எஸ்.தேவிந்த்
என்னை மயக்கிய இந்த பாடல் இதோ உங்களுக்காக !!
|
Thursday, July 2, 2009
காதல் உன் லீலையா !!!!!
பாடியவர் : இசைஞானி
படம் : ஜப்பானில் கல்யாண ராமன்
திரு.பஞ்சு அருணாசலம் அவர்கள் தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் அவர்கள் இயக்கத்தில் கமல்ஹாசர் நடித்த ஜப்பானில் கல்யாணராமன் திரைப்படத்திற்காக ஒலிதகட்டில் மட்டுமே வந்து திரைப்படத்தில் காட்சியாக்கபடாததால் அநேகபேரை சென்றடையாமல் போன இசைஞானியின் மற்றுமொரு அருமையான பாடல் தான் "காதல் உன் லீலையா இளம் காமன் உன் வேலையா ".
கேட்போரின் மனதை மயக்கும் இந்த பாடலை எனக்கு அறிமுகபடுதியவர் அன்புக்குரிய சகோதரர் அலெக்ஸ் அவர்கள் இந்த பாடலை நான் முதல்முறை கேட்டவுடனே இந்த பாடல் என் மனதில் பதிந்து விட்டது! அதற்கு காரணம் எனக்கும் காதலித்த அல்லது காதலிக்கும் (நான் இசைஞானியின் இசையை பற்றி சொல்கிறேன், வேறேதும் நினைத்து கொள்ளவேண்டாம்) அனுபவம் இருப்பதாலோ என்னவோ!!!
இந்த பாடலின் சிறப்பம்சங்களில் ஓன்று எளிமையான இசைக்கோர்வை !!
தேவையற்ற ஒலிகள் எழுப்பாமல் (சமீபத்திய ஒலியமைப்பாளர்கள் போல் மன்னிக்கவும் இசை அமைப்பாளர்களை போல்) பாடலுக்கு என்ன தேவையோ அந்தந்த வாத்தியங்களின் ஓலியை சரியான அளவில் எப்பொழுதும் போல உபயோகித்திருப்பார் இந்த பாடலில் இசைஞானி.
இந்த பாடலை நான் திரும்ப திரும்ப கேட்கும் போது மூன்று வெவ்வேறு காட்சி அமைப்புகள் என் மனதிலே தோன்றியது (ஏனென்றால் இந்த பாடல் திரைப்படத்தில் காட்சியாக்க படவில்லை என்பதால் )
காட்சி 1:
இந்த பாடலில் காதலனும் காதலியும் பிரிந்த பிறகு பாடல் வரிகளை அவர்களின் உதடுகள் உச்சரிக்காமல் கடந்த கால காதல் நினைவுகளை நினைத்துப்பார்த்து உருகுவது போலவோ ..
காட்சி 2:
காதலே வேண்டாமென்று இருக்கும் இருவருக்குள் காதல் புதிதாக குடிபுகுந்திருக்கும் அந்த ஒருவித சொல்லமுடியாத மகிழ்ச்சி கலந்த தவிப்பை விளக்கும் பாடலாகவோ...
காட்சி 3:
இளமை எனும் பூங்காற்று ,என்னுள்ளே என்னுள்ளே பாடல்கள் காட்சியமைப்பை போல காட்சிப்படுதினால் நன்றாக இருக்கும் என தோன்றியது எனக்கு..
இப்பொழுது புரிகிறதா இசைஞானியின் இசையின் லீலை..வலைபக்கத்தில் அவருடைய பாடல்களை பற்றி எழுதும் நோக்கத்தோடு வந்த என்னை அவருடைய பாடலுக்கு ஒரு இயக்குனராக காட்சியமைக்கும் ஆசையை தூண்டிவிடுகிறது !!இதுதான் .இசைஞானியின் இசையின் மகத்துவம்..
" இந்த பாடல் உம் லீலையா !! "
" இசைஞானி உம் வேலையா !! "
ராஜா சரணம் !!
என்றும் அன்புடன் இசைஞானியின் தாசன் ,
எஸ்.தேவிந்த்
என்னை மயக்கிய பாடல் இதோ உங்களுக்காக!!
===================
==============
என்னுடைய இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த பொத்தானை அழுத்தி உங்களது வாக்கினை பதிவு செய்யுங்கள் ...
நன்றி
படம் : ஜப்பானில் கல்யாண ராமன்
திரு.பஞ்சு அருணாசலம் அவர்கள் தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் அவர்கள் இயக்கத்தில் கமல்ஹாசர் நடித்த ஜப்பானில் கல்யாணராமன் திரைப்படத்திற்காக ஒலிதகட்டில் மட்டுமே வந்து திரைப்படத்தில் காட்சியாக்கபடாததால் அநேகபேரை சென்றடையாமல் போன இசைஞானியின் மற்றுமொரு அருமையான பாடல் தான் "காதல் உன் லீலையா இளம் காமன் உன் வேலையா ".
கேட்போரின் மனதை மயக்கும் இந்த பாடலை எனக்கு அறிமுகபடுதியவர் அன்புக்குரிய சகோதரர் அலெக்ஸ் அவர்கள் இந்த பாடலை நான் முதல்முறை கேட்டவுடனே இந்த பாடல் என் மனதில் பதிந்து விட்டது! அதற்கு காரணம் எனக்கும் காதலித்த அல்லது காதலிக்கும் (நான் இசைஞானியின் இசையை பற்றி சொல்கிறேன், வேறேதும் நினைத்து கொள்ளவேண்டாம்) அனுபவம் இருப்பதாலோ என்னவோ!!!
இந்த பாடலின் சிறப்பம்சங்களில் ஓன்று எளிமையான இசைக்கோர்வை !!
தேவையற்ற ஒலிகள் எழுப்பாமல் (சமீபத்திய ஒலியமைப்பாளர்கள் போல் மன்னிக்கவும் இசை அமைப்பாளர்களை போல்) பாடலுக்கு என்ன தேவையோ அந்தந்த வாத்தியங்களின் ஓலியை சரியான அளவில் எப்பொழுதும் போல உபயோகித்திருப்பார் இந்த பாடலில் இசைஞானி.
இந்த பாடலை நான் திரும்ப திரும்ப கேட்கும் போது மூன்று வெவ்வேறு காட்சி அமைப்புகள் என் மனதிலே தோன்றியது (ஏனென்றால் இந்த பாடல் திரைப்படத்தில் காட்சியாக்க படவில்லை என்பதால் )
காட்சி 1:
இந்த பாடலில் காதலனும் காதலியும் பிரிந்த பிறகு பாடல் வரிகளை அவர்களின் உதடுகள் உச்சரிக்காமல் கடந்த கால காதல் நினைவுகளை நினைத்துப்பார்த்து உருகுவது போலவோ ..
காட்சி 2:
காதலே வேண்டாமென்று இருக்கும் இருவருக்குள் காதல் புதிதாக குடிபுகுந்திருக்கும் அந்த ஒருவித சொல்லமுடியாத மகிழ்ச்சி கலந்த தவிப்பை விளக்கும் பாடலாகவோ...
காட்சி 3:
இளமை எனும் பூங்காற்று ,என்னுள்ளே என்னுள்ளே பாடல்கள் காட்சியமைப்பை போல காட்சிப்படுதினால் நன்றாக இருக்கும் என தோன்றியது எனக்கு..
இப்பொழுது புரிகிறதா இசைஞானியின் இசையின் லீலை..வலைபக்கத்தில் அவருடைய பாடல்களை பற்றி எழுதும் நோக்கத்தோடு வந்த என்னை அவருடைய பாடலுக்கு ஒரு இயக்குனராக காட்சியமைக்கும் ஆசையை தூண்டிவிடுகிறது !!இதுதான் .இசைஞானியின் இசையின் மகத்துவம்..
" இந்த பாடல் உம் லீலையா !! "
" இசைஞானி உம் வேலையா !! "
ராஜா சரணம் !!
என்றும் அன்புடன் இசைஞானியின் தாசன் ,
எஸ்.தேவிந்த்
என்னை மயக்கிய பாடல் இதோ உங்களுக்காக!!
===================
|
==============
என்னுடைய இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த பொத்தானை அழுத்தி உங்களது வாக்கினை பதிவு செய்யுங்கள் ...
நன்றி
Tuesday, June 30, 2009
ஒரு நாளும் உனை மறவாத !!!!!!!!
பாடியவர் :இசைஞானி
படம் :எஜமான்
இந்த பாடலை பற்றி சொல்வதற்கு எனக்கு ஓராயிரம் நாவுகள் இருந்தாலும் போதாது.இந்த பாடலை நான் முதன் முதலாக கேட்டது இசைஞானி ஓர்குட் இணையதள நண்பர் திரு.குமார் அவர்கள் மூலமாகத்தான்.கேட்ட அந்த தருணத்திலே என் கண்களில் நீர் பிரளயம் ஏற்பட்டு விட்டது.அப்போது உணர்ந்தேன் இசைஞானியின் குரலின் உன்னதத்தை...(இதை எழுதும் போதும் கண்ணீர் நிரம்பி நிற்கிறது கண்களில்)...
""ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்..
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்..
விழியோடு இமை போலே விலகாத நிலை எங்கே !!
விழி நீரை அணை போட்டு மொழிகாத்த துணை எங்கே
இணையான இளமானே தனியாய் உன் எஜமானே...
இணையான இளமானே தனியாய் உன் எஜமானே... """
இசைஞானி இந்த பாடல் வரிகளுக்கு மிக அழுத்தம் கொடுத்து பாடிருப்பார்.ஆனால் அவர் குரலை கேட்ட உடன் எனக்கு வரிகள் மறந்து போய்விட்டது ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு மட்டும் தான் எனக்கு தெரிந்தது.
இந்த பாடலை தமிழ் மொழி தெரியாத ஒருவர் கண்ணை மூடிக்கொண்டு கேட்டுவிட்டு சொல்லிவிடுவார் இந்த பாடல் படத்தில் எப்படி காட்சியாக்கப்பட்டிருக்கும் என்பதை.அதுதான் இசைஞானியின் தனிச்சிறப்பு.
இந்த பாடலில் இசைஞானி பயன்படுத்திய வாத்தியங்களும் சரி பின்பாட்டும் சரி அது இசைஞானிக்கு மட்டுமே தெரிந்த கலை.
குரலில் சோகத்தையும் ஒரு வித நடுக்கத்தையும் வரவழைத்து கொண்டு பாடும் கலை இசைஞானியை போல வேற யாருக்கும் அவ்வளவு சுலபமாக வந்துவிடாது .இசைஞானியை தவிர்த்து பார்த்தால் ஒரு பாடலை உடன்பாட்டுடன் அனுபவித்து பாடும் உணர்ச்சி பூர்வமான பாடகர்கள் மிகச்சிலரே அதில் எஸ்.பி.பி,ஜானகி அம்மா மற்று கே.ஜே அவர்களுக்கு தனி இடம் உண்டு என்பதையும் யாரும் மறுப்பதற்கில்லை!!
குரலில் தேன் குழைத்து குயிலை படைத்தவன் யார் ?? மனதை மெல்லிசையால் இழுத்தே வைத்தவன் யார் ?? என்ற வரிகளுக்கு என்னுடைய அகராதியில் பதில்...குரலில் தேன் குழைத்து குயிலை படைத்தவர் ராமசுவாமி மற்றும் சின்னதாய் அம்மாள் .மனதை மெல்லிசையால் இழுத்து வைத்தவர் என்றால் அது என் இசைஞானிதான்.
இந்த பாடலை போல பல பாடல்களை எமக்குத்தந்து ..
ஒரு நாளும் உமைமறவாத இனிதான வரத்தையும் ,
உறவாலும் உடல் உயிராலும் உன் இசையை விட்டுப்பிரியாத வரத்தையும்
எமக்களித்த உமக்கு நான் என்ன கைமாறு செய்ய!!
"யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என்பது போல,
எனக்கேற்பட்ட உணர்ச்சிப் பெருக்கெடுப்பு உங்களுக்கும் ஏற்பட
இதோ உங்களுக்காக அந்த பாடல்...
ராஜா சரணம் !!
என்றும் அன்புடன் எஸ். தேவிந்த்
=====================
படம் :எஜமான்
இந்த பாடலை பற்றி சொல்வதற்கு எனக்கு ஓராயிரம் நாவுகள் இருந்தாலும் போதாது.இந்த பாடலை நான் முதன் முதலாக கேட்டது இசைஞானி ஓர்குட் இணையதள நண்பர் திரு.குமார் அவர்கள் மூலமாகத்தான்.கேட்ட அந்த தருணத்திலே என் கண்களில் நீர் பிரளயம் ஏற்பட்டு விட்டது.அப்போது உணர்ந்தேன் இசைஞானியின் குரலின் உன்னதத்தை...(இதை எழுதும் போதும் கண்ணீர் நிரம்பி நிற்கிறது கண்களில்)...
""ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்..
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்..
விழியோடு இமை போலே விலகாத நிலை எங்கே !!
விழி நீரை அணை போட்டு மொழிகாத்த துணை எங்கே
இணையான இளமானே தனியாய் உன் எஜமானே...
இணையான இளமானே தனியாய் உன் எஜமானே... """
இசைஞானி இந்த பாடல் வரிகளுக்கு மிக அழுத்தம் கொடுத்து பாடிருப்பார்.ஆனால் அவர் குரலை கேட்ட உடன் எனக்கு வரிகள் மறந்து போய்விட்டது ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு மட்டும் தான் எனக்கு தெரிந்தது.
இந்த பாடலை தமிழ் மொழி தெரியாத ஒருவர் கண்ணை மூடிக்கொண்டு கேட்டுவிட்டு சொல்லிவிடுவார் இந்த பாடல் படத்தில் எப்படி காட்சியாக்கப்பட்டிருக்கும் என்பதை.அதுதான் இசைஞானியின் தனிச்சிறப்பு.
இந்த பாடலில் இசைஞானி பயன்படுத்திய வாத்தியங்களும் சரி பின்பாட்டும் சரி அது இசைஞானிக்கு மட்டுமே தெரிந்த கலை.
குரலில் சோகத்தையும் ஒரு வித நடுக்கத்தையும் வரவழைத்து கொண்டு பாடும் கலை இசைஞானியை போல வேற யாருக்கும் அவ்வளவு சுலபமாக வந்துவிடாது .இசைஞானியை தவிர்த்து பார்த்தால் ஒரு பாடலை உடன்பாட்டுடன் அனுபவித்து பாடும் உணர்ச்சி பூர்வமான பாடகர்கள் மிகச்சிலரே அதில் எஸ்.பி.பி,ஜானகி அம்மா மற்று கே.ஜே அவர்களுக்கு தனி இடம் உண்டு என்பதையும் யாரும் மறுப்பதற்கில்லை!!
குரலில் தேன் குழைத்து குயிலை படைத்தவன் யார் ?? மனதை மெல்லிசையால் இழுத்தே வைத்தவன் யார் ?? என்ற வரிகளுக்கு என்னுடைய அகராதியில் பதில்...குரலில் தேன் குழைத்து குயிலை படைத்தவர் ராமசுவாமி மற்றும் சின்னதாய் அம்மாள் .மனதை மெல்லிசையால் இழுத்து வைத்தவர் என்றால் அது என் இசைஞானிதான்.
இந்த பாடலை போல பல பாடல்களை எமக்குத்தந்து ..
ஒரு நாளும் உமைமறவாத இனிதான வரத்தையும் ,
உறவாலும் உடல் உயிராலும் உன் இசையை விட்டுப்பிரியாத வரத்தையும்
எமக்களித்த உமக்கு நான் என்ன கைமாறு செய்ய!!
"யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என்பது போல,
எனக்கேற்பட்ட உணர்ச்சிப் பெருக்கெடுப்பு உங்களுக்கும் ஏற்பட
இதோ உங்களுக்காக அந்த பாடல்...
ராஜா சரணம் !!
என்றும் அன்புடன் எஸ். தேவிந்த்
=====================
|
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா !!!!
பாடியவர் :இசைஞானி
படம் :இதயம்
இந்த பாடலை ஒவ்வொருமுறை கேட்கும்போதும் நான் என்னை மறந்து எங்கேயோ போய்விடுகிறேன் அதற்கு காரணம் இந்த பாடலின் இசைகோர்வை மற்றும் இசைஞானியின் குரல்.....
கே.ஜேசுதாஸ் அவர்கள் பாடும் போது கிடைக்காத ஏதோ ஓன்று இசைஞானி பாடும்போது இந்த பாடலில் உணர முடிந்தது எனக்கு..
அதற்கு மேலாக இந்த பாடலின் இசைகோர்வையை என்னென்பேன்!!ஏதேன்பேன் !!சொல்ல வார்த்தைகளே இல்லை.அதை பற்றி விளக்கி கூற எனக்கு அந்தளவுக்கு இசை அறிவு போதாது.
ஆனால் அந்த பாடலின் முழு இன்பத்தை என்னால் அனுபவிக்க முடிகிறது அதற்கு கரணம் நான் இசைஞானியின் இசைக்கு அடிமை என்பதாலோ என்னவோ!!!!
என் உயிரை குடிக்கும் இந்த பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்.....
ராஜா சரணம்!!!
என்றும் அன்புடன் எஸ். தேவிந்த்
படம் :இதயம்
இந்த பாடலை ஒவ்வொருமுறை கேட்கும்போதும் நான் என்னை மறந்து எங்கேயோ போய்விடுகிறேன் அதற்கு காரணம் இந்த பாடலின் இசைகோர்வை மற்றும் இசைஞானியின் குரல்.....
கே.ஜேசுதாஸ் அவர்கள் பாடும் போது கிடைக்காத ஏதோ ஓன்று இசைஞானி பாடும்போது இந்த பாடலில் உணர முடிந்தது எனக்கு..
அதற்கு மேலாக இந்த பாடலின் இசைகோர்வையை என்னென்பேன்!!ஏதேன்பேன் !!சொல்ல வார்த்தைகளே இல்லை.அதை பற்றி விளக்கி கூற எனக்கு அந்தளவுக்கு இசை அறிவு போதாது.
ஆனால் அந்த பாடலின் முழு இன்பத்தை என்னால் அனுபவிக்க முடிகிறது அதற்கு கரணம் நான் இசைஞானியின் இசைக்கு அடிமை என்பதாலோ என்னவோ!!!!
என் உயிரை குடிக்கும் இந்த பாடலை நீங்களும் கேட்டு மகிழுங்கள்.....
ராஜா சரணம்!!!
என்றும் அன்புடன் எஸ். தேவிந்த்
|
Subscribe to:
Posts (Atom)